Tamil Short Stories - father and son father and son relationship.
தமிழ் சிறுகதைகள் / Tamil Short Stories - father and son relationship. ஒரு இளவயது தந்தை, தன் இளைய மகனை மடியிலமர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார் . எங்கிருந்தோ ஒரு காக்கை பறந்து வந்து வீட்டுக் கூரையின்மீது எதிரே உட்கார்ந்தது. பையன் தந்தையிடம் - ' இது என்ன ? ' என்று கேட்டான் . தந்தை- ' காக்கை ' என்றார். மறுபடியும் பையன்- ' இது என்ன ? ' என்று கேட்டான். மறுபடியும் தந்தை- ' இது காக்கை ' என்றார். பையன் மேலும் மேலும் ' என்ன , என்ன 'என்று கேட்டுக் கொண்டிருந்தான். தந்தையும் பாசத்துடன் மேலும் மேலும் 'காக்கை ' ' காக்கை' எனக் கூறினார் . சில வருடங்களில் தந்தை கிழவரானார் , பையன் பெரியவனானான். ஒரு நாள் தந்தை பாயில் உட்கார்ந்திருந்தார். பையனைச் சந்திக்க யார் யாரோ வீட்டிற்கு வந்தார்கள் . தகப்பனார் - யார் வந்தார்கள் ? 'எனக் கேட்டார். பையன் பெயரைச் சொன்னான் . சிறிது நேரத்தில் மறுபடியும் வேறொருவர் வந்தார் . தந்தையும் யாரெனக் கேட்டார் . இந்தத் தடவை எரிச்சலுடன் பையன் சொன்னான் - " நீங்கள் ஏன் பேசாமல் இருப்பதில்லை ? உங்களுக்கு வேலை வெட்டி இ